Friday, August 03, 2012

நானும் என் அம்மாவும் ..


அடுத்த பிறவியிலும் அவளே எனக்கு தாயாக வேண்டும் !
அழுத போது அவள் தந்த பால்!
நான் உறங்க இடம் தந்த அவள் தோல்!

நான் வென்ற போதெல்லாம் அவள் தந்த முத்தம்!
தேனாய் காதில் பாய்ந்த தாலாட்டு சத்தம்!

என் வலி கண்டு அவள் வடித்த கண்ணீர்!
என் குளிர் போக அவள் வாய்த்த வெந்நீர்!

கவலை மறந்து உறங்கிய அவள் மடி!
ஈரம் போக அவள் போட்ட சாம்பிராணி நெடி!

களைப்பு நீங்க அவள் தரும் காபி!
மனசு முழுசும் அவளால் கிடைக்கும் ஹாப்பி!

என எல்லாவற்றையும் மறுபடியும் பெற்றுக்கொள்ள அல்ல !
இவைகளுக்கெல்லாம் நன்றி செலுத்த இந்த பிறவி போதாது என்பதால்…………!

No comments: