Friday, August 03, 2012

மழலை



தெறித்து விழும் மழை தூறல்
தெத்துப்பல் சிரிப்பு!

"சோ"வெனும் பெய்யும் மழை
ஓவெனும் அழுகை !

மழைநீர் பாயும் ஓடை
தள்ளி உடைத்த மீன் தொட்டி!

கார்காலமேகம் -பிஞ்சு
பாதம் களைத்த கோலம் !

குற்றால நீர் வீழிச்சி
கொஞ்சும் தமிழ் பேச்சி !

வானத்தில் பதிந்த வானவில்
கன்னத்தில் பதித்த முத்தம் !

அட, மழையில் நனைவதும்
மழலையில் நனைவதும் மகிழ்ச்சியே!

No comments: