மேகத்தின் அழுகை ஓய்ந்தது!
பூமியின் தாகம் தீர்ந்தது!
வெப்பம் மறைந்தது!
தெப்பம் நிறைந்தது!
கரும்பு,நெல் செழித்தன!
காளான்கள் விழித்தன!
ஏரி,குளம் வழிந்தது! -உழவன்
உள்ளம் மகிழ்ந்தது!
அனல் காற்று அகன்றது!
புனல் நீரும் வழிந்ததால்!
பாதைகள் சுடும்வரை !
பள்ளிக்கு விடுமுறை!
இவ்வுலகம் இல்லை மழை இன்றி !
மனதோடு சொல்வோம் மழைக்கு நன்றி!
No comments:
Post a Comment