Monday, January 28, 2013

யார் தீவிரவாதிகள் ?

அன்புள்ள இஸ்லாமிய நண்பர்களே... பாராளுமன்ற தாக்குதல் நடத்திய அப்சல் குரு ,மும்பை தாக்குதல் நடத்திய கசாப் சகாக்கள் ,கோவை தொடர் குண்டு வைத்தவர்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் தீவிரவாதிகள் என்றா ? அல்லது இஸ்லாமியர்கள் என்றா? அமெரிக்காவா அல்லது ஆப்கானா? இது இந்தியா இங்கெதற்கு புனித போர் தாக்குதல்கள்...விஞ்ஞானத்தில் உரிமை மறுப்பு என்றால் ஏது அப்துல் கலாம் ? இசைத்துறையில் மறுப்பு என்றால் ஏது ஜாகிர் உசேன் தபெல்லாவும் ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்காரும் ...?நடிப்புலகில் உரிமை மறுப்பா என்றால் இந்தியாவிலேயே அதிகமாக சம்பாதிக்கும் ஷாருக்கானும் சல்மான் காணும் ஏது ? அரசியலில் மறுப்பா ? என்றால் நாட்டின் உயர்ந்த பதவியில் ஜாகிர் உசேன் முதல் அப்துல் கலாம் வரை ஏது ? விளையாட்டு மறுப்பு என்றால் அசாருதினும் ஜாகிர்கானும் ஏது ? பெண்கள் உரிமை மறுப்பு என்றால் சானியா மிர்சா ஏது ? கமல் ஹாசனை விடுங்கள் அவர் ஈழ தமிழகளுக்கு ஆதரவாக சிங்களரை எதிர்க்க புத்தர் வேஷம் போட்டு அவார்டுக்காக அடுத்த படம் எடுத்தாலும் எடுப்பார் ..நீங்களே சொல்லுங்கள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகளா? அல்லது முஸ்லிம்களா?
அப்படி நடந்த தாக்குதல்களிலும் போர்களிலும் இந்திய ராணுவத்தில் இருந்த முஸ்லிம் வீரர்களும் இறந்திருப்பார்களே அவர்களுகென்ன பதில் இருக்கிறது உங்களிடம்... அரசாங்கத்தின் ஓட்டரசியல் ,சில சுயநல அமைப்புகள் போன்றோரின் காரணமாக அற்ப விஷயங்களில்
விழுந்து விடாதிர்கள் ... விஸ்வரூபம் இப்போ பிரச்சனை அல்ல. அது வந்தாலும் வராவிட்டாலும் என் அன்பு நண்பர்களே தாக்ரேக்களையும் மோடிகளையும் நாட்டுப்பற்று கொண்ட இந்து இனம்பிரிபான் அதுபோல தாவ்வூத்களையும் ,கசாப்களையும் நீங்கள் காயிதே மிள்ளத்திடமிருந்த்ம் ,அப்துல் கலாமிடமிருந்தும் இனம் பிரிக்க வேண்டும்.. சினிமா மட்டும்மல்ல எந்த ஒரு விஷயத்தாலும் இனபிரிவும் வேண்டாம் ..இரத்த சிதறலும் வேண்டாம் ...கோவை சம்பவமும் வேண்டாம் ..குஜராத் சம்பவமும் வேண்டாம்.... இந்துவோ முஸ்லீமோ பிரிவினை நபர்களை ,சக்திகளை இனம் காணுங்கள் ....

No comments: